ஆப்நகரம்

காவிரித் தாயே! தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே? நடிகர் விவேக் கவிதை டுவிட்!

காவிரியுடன் உரையாடுவது போன்று, நடிகர் விவேக் டுவிட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2018, 1:20 pm
சென்னை: காவிரியுடன் உரையாடுவது போன்று, நடிகர் விவேக் டுவிட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil Actor Vivekh
நடிகர் விவேக்


காவிரிக்காக தமிழகமே ஒன்று திரண்டு போராடி வருகிறது. தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு ஆதரவாக, மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மீண்டும் அவகாசம் கேட்டு தமிழர்களை வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விவேக், தனது டுவிட்டரில் காவிரியுடன் உரையாடுவது போன்ற கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், காவிரித் தாயே என்னை மன்னித்துவிடு.

உன்னைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் காவிரி அன்னை, விவசாயம் தான் அனைத்திற்கும் ஆதாரம். அதை மறவாதே.

கன்னடரும் உன் உடன்பிறப்பு. காவிரியும் உன் நீர்பரப்பு. உரிமை பெறத் தவறாதே என்று பதிலளிப்பதாக நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

Actor Vivekh tweets about Cauvery conversation as poem.

அடுத்த செய்தி

டிரெண்டிங்