ஆப்நகரம்

Ajith: தூத்துக்குடி சம்பவத்திற்கு ஒரு பதிவுகூட இல்லையே; எங்கே போனீர்கள் விஜய், அஜித்!

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு கண்டனம் கூட இல்லையே என்று நடிகர்கள் விஜய், அஜித் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Samayam Tamil 31 May 2018, 11:14 am
சென்னை: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு கண்டனம் கூட இல்லையே என்று நடிகர்கள் விஜய், அஜித் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil Vijay and Ajith


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் விஜய், அஜித் இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமலுக்கு பிறகு விஜய், அஜித்திற்கு தான் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில் விஜய், அஜித்திடம் இருந்து ஏதேனும் பதிவுகள் வெளியானால், உலகம் முழுவதும் கொண்டு செல்ல ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்திற்கு ஒரு கண்டனமோ அல்லது பதிவோ வெளியாகவில்லை என்று அவர்களது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

முன்னதாக நீட் தேர்வு பாதிப்பால் உயிரிழந்த அனிதாவின் வீட்டிற்கு சென்று விஜய் ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Actors Vijay, Ajith didnt give any comments on Thoothukudi Firing.

அடுத்த செய்தி

டிரெண்டிங்