ஆப்நகரம்

தமிழ் திரையுலக மவுன போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்கள் இவர்கள் தான்!

நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மவுன போராட்டத்தில் சில நடிகர்கள் பங்கேற்கவில்லை.

Samayam Tamil 8 Apr 2018, 2:24 pm
சென்னை: நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மவுன போராட்டத்தில் சில நடிகர்கள் பங்கேற்கவில்லை.
Samayam Tamil Silent Protest
மவுன போராட்டம்


காவிரி மீட்பு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை வலியுறுத்தி, தமிழ் திரையுலகம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் ரஜினி, கமல், விஜய், விக்ரம், கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் நடிகைகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த மவுன போராட்டத்தில் அஜித் குமார், பிரகாஷ் ராஜ், சிம்பு, டி.ராஜேந்தர், சரத்குமார், ராதாரவி, சேரன், வடிவேலு, தமன்னா, திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

காவல்துறையினர் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், அதுவரை மட்டுமே திரையுலகினர் அமர்ந்திருந்தனர்.

இருப்பினும் திரையுலக மவுன போராட்டத்தால் திருப்தி அடையாத பொதுமக்கள், சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Actors, Who didn't attend the Cauvery protest from Kollywood.

அடுத்த செய்தி

டிரெண்டிங்