ஆப்நகரம்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்!

கணவருடன் கருத்து வேறுபாடு குறித்த பிரச்னைக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

TOI Contributor 17 Nov 2016, 6:03 pm
கணவருடன் கருத்து வேறுபாடு குறித்த பிரச்னைக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Samayam Tamil actress aishwarya has put full stop to all the rumor about her
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்!


நடிகை ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர் என்று பரவிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

தற்போது வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும், சூரியனை வழிபடும், ‘சாட் பூஜை’ விழாவில், கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப், மாமியார் ஜெயா பச்சன், மகள் ஆரத்யா ஆகியோரோடு கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்கள் கலந்துகொண்ட பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, வதந்தியை கிளப்புவோரின் வாய்களை அடைத்து விட்டார் ஐஸ்வர்யா.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘தொழில் வேறு, குடும்பம் வேறு என்பதில் கவனமாக நான் இருக்கிறேன். எந்த ஒரு பிரச்னை என்றாலும், என் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசிப்பேன். நானாக முடிவெடுக்கமாட்டேன். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்’’ என்று கோபமாக கூறினார் ஐஸ்வர்யா ராய்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்