ஆப்நகரம்

ரோஜா படம் பார்த்து செருப்பால் அடித்துக்கொண்ட நடிகை: இதென்ன புது கதை.!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தை பார்க்கும் போதெல்லாம் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொள்வதாக நடிகை ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Jun 2022, 8:27 am
90களில் வெளியாகி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பேசப்படும் படம் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’. இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி, மதுபாலா, ஜனகராஜ் உட்பட பலரும் நடித்திருந்தனர். ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
Samayam Tamil Roja Movie
Roja Movie


தமிழ் சினிமாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ரோஜா அரவிந்த் சாமி, மதுபாலா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க தவறியதை நினைத்துஇப்பவும் ஒரு நடிகை கவலையில் இருக்கிறாராம். இப்பட கதை எழுதியதும் நாயகியாக நடிக்க வைக்க முதலில் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை தான் மணிரத்னம் கேட்டாராம். ஆனால் அப்போது தெலுங்கு படத்திற்காக முன்பணம் வாங்கி விட்டதால் மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாது என ஐஸ்வர்யாவின் பாட்டி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ஒரு பேட்டியில், ரோஜாவில் நடிக்க தேதி இல்லை என தெலுங்கு படத்தில் நடித்தேன், ஆனால் அந்த படமும் டிராப் ஆனது. திரையில் ரோஜா படத்தை பார்த்த போது தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்