ஆப்நகரம்

Akanksha Mohan: தூக்கில் பிணமாகத் தொங்கிய நடிகை: சிக்கிய கடிதம்.!

நடிகை அகன்ஷா மோகன் தற்கொலை செய்து கொண்ட இடத்திலிருந்து கடிதம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Sep 2022, 6:17 pm
மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்த இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16 ஆம் தேதி ரிலீசான சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் மட்டுமல்லாமல் சில விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார்.
Samayam Tamil அகன்ஷா மோகன்
அகன்ஷா மோகன்


இந்நிலையில் அந்தேரி ஓட்டலில் தங்கியிருந்த அகன்ஷா மோகன் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஹோட்டலில் தங்கியிருந்த அகன்ஷா, நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Rajini: 100 கோடிப்பு.. ‘கபாலி’ படம் குறித்து தாணு சொன்ன விஷயம்: ஆடிப்போன ரசிகர்கள்.!

மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், ' எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல. யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்' என எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்