ஆப்நகரம்

30 வருடங்களுக்கு பின் ரீ எண்ட்ரி கொடுக்கும் சமந்தாவின் மாமியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரபல நடிகை அமலா 30 வருடங்களுக்கு பின்னர் பின்னர் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2021, 9:47 pm
தமிழ் திரையுலகில் கடந்த 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. பிரபல நடிகை சமந்தாவின் மாமியாரான இவர், சுமார் 30 வருடங்களுக்கு பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil Amala Akkineni
Amala Akkineni


டி ராஜேந்தர் இயக்கிய ’மைதிலி என்னை காதலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ’வேலைக்காரன்’, ‘மாப்பிள்ளை’, கமல்ஹாசன் நடித்த ’பேசும்படம்’, ‘சத்யா’, மணிரத்னம் இயக்கிய ’அக்னி நட்சத்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 1991 ஆம் ஆண்டு 'கற்பூர முல்லை' என்ற படம் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட பின் படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டார் அமலா.

'லிஃப்ட்' பட டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்: உற்சாகத்தில் கவின் ரசிகர்கள்!
இந்நிலையில் தற்போது சுமார் 30 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் அமலா. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஷர்வானந்த் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமிழில் ’கணம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் சுஜித் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்