நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சின்னத்திரை நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை மூலம் பட்டி, தொட்டியெல்லாம் புகழ் பெற்றவர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கிய பின்பு பல கிண்டல்களை சந்தித்து வந்தார். ஆனாலும் சோஷியல் மீடியா மூலம் அவை எல்லாவற்றிற்கும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் இவரது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்ப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் தன்னை கலாய்ப்பது தொடர்வதால் இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறுவதாக இவர் அறிவித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த முடிவுக்கு பலரும் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் இவரது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்ப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் தன்னை கலாய்ப்பது தொடர்வதால் இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறுவதாக இவர் அறிவித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த முடிவுக்கு பலரும் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர்.