ஆப்நகரம்

கொரோனா ஊரடங்கு: கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய நடிகை ரோஜா!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இருந்த கர்ப்பிணி பெண்னுக்கு நடிகை ரோஜா தன்னுடைய காரை கொடுத்து உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 5:49 pm
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் மிக அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார் நடிகை ரோஜா. கடைசியாக அவர் 2015ல் வெளிவந்த என் வழி தனி வழி என்கிற படத்தில் நடித்திருந்தார்.
Samayam Tamil Roja


அவர் சினிமாவை விட்டு விலகி தற்போது அரசியலில் மட்டுமே இப்போதும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளார் ரோஜா.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ரோஜா தன் தொகுதியில் என்ன நிலைமை என அறிய ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். ஆனால் அந்த மருத்துவமனையில் பிரசவம் பிரசவம் பார்க்க வசதி இல்லை என தெரியவந்துள்ளது.

அதனால் அந்த பெண்ணை தன் காரிலேயே திருப்தியில் உள்ள ஒரு பெண்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் ரோஜா.

ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ரோஜா சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்