ஆப்நகரம்

அச்சம் என்பது மடமையடா சிம்புவின் தங்கை அஞ்சலி ராவிற்கு குழந்தை பிறந்தாச்சு! ரசிகர்கள் வாழ்த்து

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள அஞ்சல் ராவிற்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறது.

Samayam Tamil 29 Jul 2020, 2:14 pm
தமிழ்சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தவர் அஞ்சலி ராவ். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்தவர் இவர் தான். சினிமா மட்டுமின்றி பல சீரியல்களிலும் அவர் நடித்து வந்தார்.
Samayam Tamil Anjali Rao


அஞ்சலி ராவ் தெலுங்கு பெண் என்றாலும் மலையாள திரைப்பட எடிட்டர் ஜோமின் மேத்யூ என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டிலாகி இருக்கிறார். தமிழ் சீரியல்கள் மற்றும் மலையாள சீரியல்களிலும் அவர் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அஞ்சலி ராவ் மற்றும் ஜோமின் மேத்யூ ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அஞ்சலி ராவ் மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அஞ்சலி ராவ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் ஒரு குறும் படத்திலும் நடித்திருந்தார். உணர்தல் என்ற பெயரில் உருவான அந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த குறும்படம் அமேசன் பிரைம் தளத்தில் யூஎஸ், யுகே, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அது பற்றி சில வாரங்களுக்கு முன்பு அஞ்சலி ராவ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

சீரியல்களில் நடித்து வருவது பற்றி இதற்கு முன்பு அஞ்சலி அளித்த ஒரு பேட்டியில், "நான் 2016 முதலே சீரியல்களில் நடித்து வருகிறேன். சீரியல்கள் என்றாலே எனக்கு வரும் ரோல்கள் மாதம் முழுவதும் அழுது கொண்டிருக்கும் கதாபாத்திரங்களாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட ரோல்களில் நடித்து எனக்கு போரடித்துவிட்டது. அந்த சமயத்தில் தான் மலையாளத்தில் சுவாதி நட்சத்திரம் ஜோதி இந்த சீரியலில் வில்லியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடிப்பு திறமையை காட்டுவதற்காக நல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதால் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்" என அஞ்சலி கூறி இருந்தார்.

ஆரம்பத்தில் சில விளம்பர படங்கள் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அஞ்சலி ராவ். அதன் பிறகு 2011இல் அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் என்ற பட்டத்தை பெற்றார். அதற்கு பிறகு தான் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார், மேலும் பிரியதர்ஷன் இயக்கிய சில சமயங்களில் படத்திலும் அவர் நடித்திருந்தார். தனக்கு நடிப்பு திறமையை காட்டும் அளவுக்கு இருக்கும் கதாபாத்திரங்கள் தான் வேண்டும் என்றும் கிளாமருக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதனால் தான் சீரியல்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்தபோது அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.

சென்னையில் செட்டில் ஆனாலும் கேரளா தான் தனது இரண்டாவது வீடு என அவர் கூறி இருக்கிறார். அவரது கணவர் கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஐந்து வருடங்கள் அஞ்சலி ராவ் மற்றும் ஜோமின் இருவரும் காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்திருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்