நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் போது எனக்கு கை, காலெல்லாம் உதறல் எடுத்தது என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
இயக்குனர் ராம் தற்போது மம்முட்டியை வைத்து ‘பேரன்பு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகைள் அஞ்சலி, சாதனா அஞ்சலி அமீர் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். படத்தை பி.எல். தேனப்பன் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியானது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் நடிகை அஞ்சலி இந்தப் படம் பற்றி கூறுகையில், ‘‘பேரன்பு’ படத்தில் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்த சாதனா மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளார். இப்போதே இவருக்கு நிறைய விருதுகள் காத்திருக்கின்றன. நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும்போது எனக்கு கை கால் உதறல் எடுத்து விட்டது. நடுக்கத்தில் பேச்சை வரவில்லை. அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு பின்னர் நடித்தேன்’’ என்றார் நடிகை அஞ்சலி.
இயக்குனர் ராம் தற்போது மம்முட்டியை வைத்து ‘பேரன்பு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகைள் அஞ்சலி, சாதனா அஞ்சலி அமீர் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். படத்தை பி.எல். தேனப்பன் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியானது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் நடிகை அஞ்சலி இந்தப் படம் பற்றி கூறுகையில், ‘‘பேரன்பு’ படத்தில் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்த சாதனா மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளார். இப்போதே இவருக்கு நிறைய விருதுகள் காத்திருக்கின்றன. நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும்போது எனக்கு கை கால் உதறல் எடுத்து விட்டது. நடுக்கத்தில் பேச்சை வரவில்லை. அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு பின்னர் நடித்தேன்’’ என்றார் நடிகை அஞ்சலி.