ஆப்நகரம்

‘மெருலி’ படத்தில் பத்திரிகையாளராக நடிக்கும் அர்ச்சனா சிங்!

‘மெருலி’ படத்தில் பத்திரிகையாளராக நடிக்கும் அர்ச்சனா சிங்!

TOI Contributor 25 Feb 2017, 4:17 pm
நடிகை அர்ச்சனா சிங் ‘மெருலி’ படத்தில் துணிச்சலான பத்திரிகையாளராக நடித்துள்ளார்.
Samayam Tamil actress archana singh going to act as journalist
‘மெருலி’ படத்தில் பத்திரிகையாளராக நடிக்கும் அர்ச்சனா சிங்!


தமிழில் ‘யானை மேல குதிரை சவாரி’ உட்பட பல படங்களில் நடித்தவர் அர்ச்சனா சிங். இவர் கன்னட நடிகை. தற்போது இவர் தமிழில் ‘மெருலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக அபிஷேக் நடித்துள்ளார். நடிகர் அபிஷேக் ‘பாபநாசம்’ படத்தில் கௌதமியின் தம்பியாக வருவார்.

இந்தப் படம் குறித்து அர்ச்சனா சிங் கூறுகையில், ‘‘தற்போது நான் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதில் ‘மெருலி’ தமிழ்ப்படத்தில் துணிச்சலான பத்திரிகையாளராக நடிக்கிறேன். சில சமூக விரோதிகள் பற்றிய தகவல்களை பத்திரிகையில் வெளியிட்டதால், பெரிய பிரச்சினையில் மாட்டி பின்னர் அவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறேன். இதுதான் படத்தின் கதை.

மேலும், கிளாமரைப்பொறுத்தவரை நயன்தாரா, திரிஷாதான் எனது ரோல் மாடல். மேலும் முன்னணி ஹீரோக்களுடன் அயிட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்’’ என்றார் அர்ச்சனா சிங்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்