ஆப்நகரம்

இது நடிகர் அதர்வாவின் ஆதங்கம்!!

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி நடிக்க நினைக்கிறேன், அதற்காக என்னை நானே தயார் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர் அதர்வா.

TOI Contributor 22 May 2016, 5:41 pm
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி நடிக்க நினைக்கிறேன், அதற்காக என்னை நானே தயார் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர் அதர்வா.
Samayam Tamil actress atharva wants to act in different characters
இது நடிகர் அதர்வாவின் ஆதங்கம்!!


நடிகர் அதர்வா, ‘ஈட்டி’, ‘கணிதன்’ படத்திற்கு பிறகு ‘ருக்குமணி வண்டி வருது’, ‘செம போத ஆகாத’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், ‘’நான் உடலை வருத்தி கடுமையாக உழைத்த படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளன. எனவே, இனி நடிக்கும் எல்லா படங்களுக்கும் வித்தியாசம் காட்டி நடிக்க என்னை நான் மிகவும் தயார்படுத்தி கொள்கிறேன். எனது உடல் உழைப்பையும், கவனத்தையும் அதிகம் செலுத்தி வருகிறேன். ‘பரதேசி’ படத்துக்காக நான் மிகவும் உழைத்தேன். இயக்குனர் பாலா சொன்னபடி தினமும் படப்பிடிப்புக்கு முன்பாக வீட்டில் வைத்தே நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு என்னை தயார் செய்து நடித்தேன்.

கடுமையாக உழைத்த அந்த படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அது போல் ‘ஈட்டி’ படத்துக்காக உடற்பயிற்சி செய்து ‘சிக்ஸ்பேக்’ உடல் கட்டுக்கு என்னை மாற்றி நடித்தேன். அதற்கும் நல்ல பலன் கிடைத்தது. இது போல் இப்போது ஒவ்வொரு படத்துக்கும் என்னை தயார் செய்கிறேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்