ஆப்நகரம்

‘நாடோடிகள் 2’வில் அஞ்சலியுடன் இணைந்த இன்னொரு நாயகி!

சசிகுமார் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘நாடோடிகள்2’ படத்தில் நடிகை அஞ்சலியுடன் இன்னொரு நாயகியாக நடிகை அதுல்யாவும் இணைந்துள்ளார்.

TNN 18 Jan 2018, 1:27 pm
சசிகுமார் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘நாடோடிகள்2’ படத்தில் நடிகை அஞ்சலியுடன் இன்னொரு நாயகியாக நடிகை அதுல்யாவும் இணைந்துள்ளார்.
Samayam Tamil actress athulya will join in nadodigal2 movie
‘நாடோடிகள் 2’வில் அஞ்சலியுடன் இணைந்த இன்னொரு நாயகி!


தமிழில் ‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதையடுத்து சமுத்திரக்கனியுடன் ‘ஏமாலி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது சசிகுமார் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிகை அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இணையும் படம் ‘நாடோடிகள் 2’. இந்த படத்தின் நாயகியாக ஏற்கனவே அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இன்னொரு நாயகியாக நடிகை அதுல்யாவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படம் பற்றி நடிகை அதுல்யா தனது டுவிட்டரில்.. ‘‘எனது விருப்பத்துக்குரிய இயக்குனரான சமுத்திரக்கனியின் படமான ‘நாடோடிகள் 2’ படத்தில் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சசிகுமாருடன் பணிபுரிவதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அஞ்சலி உள்பட இந்த படத்தின் டீமுடன் பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சி’’ என்றார்.

‘நாடோடிகள் 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் பரணி, கஞ்சாகருப்பு உட்பட பலர் நடிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்