ஆப்நகரம்

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம்: அதிரடி தீர்ப்பு பற்றி பிரபல நடிகையின் கருத்து!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு நடிகை பாமா எதிர்மறையான கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Oct 2018, 5:33 pm
சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிரபல நடிகை பாமா கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம்: அதிரடி தீர்ப்பு பற்றி பிரபல நடிகையின் கருத்து!
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம்: அதிரடி தீர்ப்பு பற்றி பிரபல நடிகையின் கருத்து!


உச்சநீதிமன்றம் அண்மையில் சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பை பெண்ணியம் பேசுபவர்கள் வரவேற்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது நெருடலாக தான் இருக்கிறது.

தற்போது சபரிமலை வரலாற்றில் முக்கிய அம்சமான பரம்பரை அரசர்களின் ராஜ குடும்பமே இந்த தீர்ப்பை எதிர்த்துள்ளது. மேலும் தேவசம் போர்டை சேர்ந்தவர்கள் சிலர் பதவி விலகியுள்ளனர்.

இந்நிலையில் மலையாள சினிமாவை சேர்ந்த நடிகை பாமா இதுபற்றி கூறுகையில், ‘‘மதம் மற்றும் கோவில் சம்பிரதாயங்களுக்கு நிறைய வழிமுறைகள் இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் தனித்தனி விதிமுறைகள் இருக்கின்றன. அவைகள் மதிப்பானவை.

ஒருவேளை எனக்கு இன்னும் சில காலங்களுக்கு உயிர்வாழும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரியான அதிரடி தீர்ப்புகள் மூலம் இல்லாமல் கோவில் நடைமுறைகளே சுவாமி ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி வழங்கும் வரை நான் காத்திருப்பேன். மேலும் மற்ற அனைத்து பெண்களுக்கும் நான் இதையே சொல்ல விரும்புகிறேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்