ஆப்நகரம்

திருப்பதியில் நடந்து முடிந்த நடிகை சாந்தினியின் திருமணம்!

நடிகை சாந்தினியின் காதல் திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.

Samayam Tamil 12 Dec 2018, 4:06 pm
நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
Samayam Tamil chandini


இந்நிலையில் இவர்களின் திருமணம் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சம்மதத்துடன் இன்று இந்து முறைப்படி திருப்பதியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 16ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சாந்தினி - நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்