கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் காரணத்தால் அதை சமாளிக்க அரசு மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என முடக்கியுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகை தேவயானிதற்போது ராசாத்தி என்கிற சீரியலில் நடித்து வருகிறார். கொரோனா லாக் அவுட் காரணமாக அதன் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது மகள்களான இனியா மற்றும் பிரியங்கா ஆகியோருக்கும் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே அனைவரும் குடும்பத்துடன் இருக்கின்றனர்.
ஈரோடு பகுதியில் ராஜகுமாரனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு தான் தற்போது அவர்கள் குடும்பம் தங்கியிருக்கிறது.
இந்த நேரத்தை வீணடிக்கக்கூடாது என எண்ணி தற்போது தேவயானி தன் மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. விஜய், அஜித், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே அவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்தார். ராஜகுமாரன் இயக்கிய பல படங்களில் தேவயானிதான் ஹீரோயினாக நடித்தார்.
அவர்கள் காதலுக்கு வீட்டில் பெற்றோர் ஒப்புதல் வழங்காததால் அவர்கள் இருவரும் ஓடிப்போய் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பிறகு படிப்படியாக சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் தேவயானிபள்ளி ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு சின்னத்திரையில் களமிறங்கி அதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை தேவயானிதற்போது ராசாத்தி என்கிற சீரியலில் நடித்து வருகிறார். கொரோனா லாக் அவுட் காரணமாக அதன் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது மகள்களான இனியா மற்றும் பிரியங்கா ஆகியோருக்கும் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே அனைவரும் குடும்பத்துடன் இருக்கின்றனர்.
ஈரோடு பகுதியில் ராஜகுமாரனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு தான் தற்போது அவர்கள் குடும்பம் தங்கியிருக்கிறது.
இந்த நேரத்தை வீணடிக்கக்கூடாது என எண்ணி தற்போது தேவயானி தன் மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. விஜய், அஜித், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே அவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்தார். ராஜகுமாரன் இயக்கிய பல படங்களில் தேவயானிதான் ஹீரோயினாக நடித்தார்.
அவர்கள் காதலுக்கு வீட்டில் பெற்றோர் ஒப்புதல் வழங்காததால் அவர்கள் இருவரும் ஓடிப்போய் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பிறகு படிப்படியாக சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் தேவயானிபள்ளி ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு சின்னத்திரையில் களமிறங்கி அதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.