ஆப்நகரம்

ஜெயலலிதா மர்ம மரணம்:மோடிக்கு கெளதமி எழுதிய கடிதம் பொய்யா?

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து பிரதமருக்கு நடிகை கெளதமி எழுதியதாக கடிதம் ஏதும் வரவில்லை என பிரதமர் அலுவலகம் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

TNN 4 Feb 2017, 11:21 am
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து பிரதமருக்கு நடிகை கெளதமி எழுதியதாக கடிதம் ஏதும் வரவில்லை என பிரதமர் அலுவலகம் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil actress gauthami did not wrote any letter to modi regarding jayalalitha deathsays rti
ஜெயலலிதா மர்ம மரணம்:மோடிக்கு கெளதமி எழுதிய கடிதம் பொய்யா?


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிலவுவதாகவும்,எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விரிவான அறிக்கை தரப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலான கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக நடிகை கெளதமி தனது வலைப்பூ பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கெளதமி உண்மையிலேயே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளாரா?எனக் கேட்டு தீபக் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி பிரதமர் அலுவலகம் தீபக்கிற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில்,”எங்கள் பதிவுகளில் அப்படி ஒரு தகவல் இல்லை.”என தெரிவித்துள்ளது.


”கெளதமி கண்டிப்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.ஆனால் பிரதமரின் அலுவலக முகவரியை தவறுதலாக எழுதியிருப்பார்.”என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கெளதமியை விமர்சித்து வருகின்றனர்.

Actress Gauthami did not wrote any letter to Modi regarding Jayalalitha death,says RTI

அடுத்த செய்தி

டிரெண்டிங்