மலையாள பட உலகிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக நடிகை ஹனிரோஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உட்பட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். இவர் ஒன் பை டூ’ என்ற மலையாள படத்தில் நடித்த முத்தக்காட்சி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் மலையாள சினிமாவிலும் இருக்கிறது என்று நடிகை ஹனி ரோஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும், ஏற்காததும் நம் கையில்தான் இருக்கிறது. நடிக்க வரும் புதிதில் அனைவருமே போராட வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் சிலர் மூளைச்சலவை செய்வார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். என் பெற்றோர் எப்போதும் என்னுடன் இருப்பதால் எனக்கு அந்த அனுபவம் ஏதும் வரவில்லை என்று நடிகை ஹனிரோஸ் கூறியுள்ளார்.
தமிழில், சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உட்பட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். இவர் ஒன் பை டூ’ என்ற மலையாள படத்தில் நடித்த முத்தக்காட்சி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் மலையாள சினிமாவிலும் இருக்கிறது என்று நடிகை ஹனி ரோஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும், ஏற்காததும் நம் கையில்தான் இருக்கிறது. நடிக்க வரும் புதிதில் அனைவருமே போராட வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் சிலர் மூளைச்சலவை செய்வார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். என் பெற்றோர் எப்போதும் என்னுடன் இருப்பதால் எனக்கு அந்த அனுபவம் ஏதும் வரவில்லை என்று நடிகை ஹனிரோஸ் கூறியுள்ளார்.