ஆப்நகரம்

தற்போதைய பெண்கள் சாதாரணமாக கவர்ச்சி உடை அணிகிறார்கள்! வருத்தத்தடன் கவர்ச்சி நடிகை!

நாங்கள் படங்களில் பாடல்களுக்கு ஏற்றமாதிரி கவர்ச்சி உடைகளை அணிந்து நடித்தோம்

Samayam Tamil 14 Mar 2019, 3:27 pm
நாங்கள் படங்களில் பாடல்களுக்கு ஏற்றமாதிரி கவர்ச்சி உடைகளை அணிந்து நடித்தோம். அப்போது நாங்கள் அணிந்த உடைகளைத்தான் தற்போதைய பெண்கள் சர்வசாதாரணமாக அணிந்து கொண்டு வெளியில் சுற்றி வருகிறார்கள் என்று பிரபல கவர்ச்சி நடிகை ஜெயமாலினி வருத்தத்துடன் கூறியுளளார்.
Samayam Tamil jayamalini


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பெயரும், புகழும் கொண்ட கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயமாலினி. ஒரு காலத்தின் இவரின் குத்தாட்ட பாடல் இல்லா படம் இல்லை என சொல்லும் படி இருந்தது. 1970 & 1980 களில் முன்னணி நடிகையாக வலம வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்தார்.

அண்மையில் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘என் அப்பா ஒரு தயாரிப்பாளர். நிறைய படங்களை எடுத்து எங்கள் சொத்துக்களை கரைத்து விட்டார். வீட்டை விற்கும் சூழ்நிலை வந்தது. அதனால் நானும் என் அக்கா ஜோதி லட்சுமியும் சினிமாவில் நடிக்க வந்தோம். நான் நடித்த படத்தில் கவர்ச்சி இருக்கும் ஆபாசம் இருக்கிறது.

வாய்ப்புக்காக யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. படத்தில் நடிக்கும் நடிகைகளை ஹீரோ, வில்லன் என யாரும் தொடமாட்டார்கள். மரியாதையாக நடத்துவார்கள். நாங்கள் சினிமாவில் அன்று கவர்ச்சி நடனம் ஆடும் போது அணிந்த உடைகளைத்தான் இப்போதுள்ள பெண்கள் அணிந்து கொண்டு வெளியில் சர்வ சாதாரணமாக செல்கிறார்கள்’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்