ஆப்நகரம்

தயாரிப்பாளருக்காக "கிணர்" படத்தில் நடிக்க சம்மதித்த ஜெயப்பிரதா!

தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளருக்காக அவர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை ஜெயப்பிரதா.

TNN 11 Nov 2017, 5:36 pm
தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளருக்காக அவர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை ஜெயப்பிரதா.
Samayam Tamil actress jayaprada accept to act in the movie name of kinnar
தயாரிப்பாளருக்காக "கிணர்" படத்தில் நடிக்க சம்மதித்த ஜெயப்பிரதா!


நடிகை ஜெயப்பிரதாவை வைத்து மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தற்போது ‘கிணர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு இந்தப் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படம் தமிழில் ‘கேணி’ என்கிற பெயரிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் பசுபதி, பார்த்திபன், நாசர், ரேவதி, அர்ச்சனா, அனுஹாசன் மற்றும் ஜெயப்ரதா என ஒரு தமிழ் நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.

இது சின்ன பட்ஜெட் படம். இருந்தாலும் பிஸியான கால்ஷீட்டுக்கு மத்தியில் நடிகை ஜெயப்ரதா இந்தப் படத்தில் நடிக்க சம்மதத்திற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளராம். 6 வருடத்திற்கு முன்பு இவர் மலையாளத்தில் மோகன்லால்& -ஜெயப்ரதா நடிப்பில் உருவான ‘பிரணயம்‘ படத்தை தயாரித்துள்ளார். அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஜெயப்பிரதா நடிக்க சம்மதித்தாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்