ஆப்நகரம்

சாலிகிராமத்தில் மீண்டும் இன்னொரு நடிகை கொலை!

சாலிகிராமத்தில் மீண்டும் இன்னொரு நடிகை கொலை!

TOI Contributor 6 Dec 2016, 7:48 am
சென்னை சாலிகிராமத்தில் நடிகை ஜெயஸ்ரீ என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Samayam Tamil actress jayasri murdered in saaligramam
சாலிகிராமத்தில் மீண்டும் இன்னொரு நடிகை கொலை!


சமீபத்தில் நடந்த சபர்ணா தற்கொலை அதிர்ச்சியில் இருந்தே இன்னும் யாரும் வெளியேவரவில்லை. அதற்குள் நடிகை ஜெயஸ்ரீயின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார் நடிகை ஜெயஸ்ரீ. இவர் சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டின் படுக்கையறையில் ஜெயஸ்ரீ பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தலையணையால் முகத்தை அழுத்தி ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் போலீசில் வாக்குமூலம் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்