ஆப்நகரம்

அலைபாயுதேவுக்கு அப்புறம் செக்க சிவந்த வானத்தில் நடிக்கும் ஜெயசுதா!

இயக்குனர் மணிரத்னம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஜெயசுதாவுக்கு தற்போது தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Samayam Tamil 31 Aug 2018, 4:23 pm
இயக்குனர் மணிரத்னம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஜெயசுதாவுக்கு தற்போது தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
Samayam Tamil jayasudha.


நடிகை ஜெயசுதாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் இமயம் பாலச்சந்தர். இவர் அறிமுகமான முதல் தமிழ் படம் ‘அறங்கேற்றம்’. அதையடுத்து இவர் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘நான் அவனில்லை’, ‘அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘அலைபாயுதே’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடிகை ஷாலினிக்கு அம்மாவாக நடித்திருந்தார் ஜெயசுதா. இந்தப் படம் வெளியாகி தற்போது 18 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் நடிகை ஜெயசுதாவுக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்தது அவரின் முதல் படத்தில் நடித்தது போல இருந்தது என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்