ஆப்நகரம்

நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை

நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் நிதி நெருக்கடி காரணமாக மும்பையில் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜிதேந்திராவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார் இவர்.

TNN 14 Mar 2017, 9:02 pm
நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் நிதி நெருக்கடி காரணமாக மும்பையில் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜிதேந்திராவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார் இவர்.
Samayam Tamil actress jayasudha husband nitin kapoor died
நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை


நடிகை ஜெயசுதா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவர் இந்தி நடிகர் ஜிதேந்திராவின் சகோதரர் நிதின் கபூரை கடந்த 1995ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர். இவரது கணவர் ''மேரா பட்டி சிர்ப்'', ''காஞ்சனா சீதா'', ''கலிகாலம்'', ''ஹேண்ட்ஸ் அப்'' போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். தனது மகன் ஷ்ரேயனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை நிதின் கபூர் தயாரித்து இருந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது.

அவர் தயாரித்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதனால், நிதி நெருக்கடிக்கு நிதின் தள்ளப்பட்டதாகவும், அதனால் மனமுடைந்து இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நிதின் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவரது இறுதிச் சடங்கு நாளை மும்பையில் நடைபெறுகிறது.

ஜெயசுதா சிறிய குறிப்பு:

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் ஜெயசுதா. செகந்திராபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அப்போதும் காங்கிரஸ் தரப்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து அரசியலில் இருந்து ஜெயசுதா ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், கடந்தாண்டு, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் ஜெயசுதா சந்தித்து, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்