ஆப்நகரம்

திடீரென சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா!

முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பள அளவுக்கு தன்னுடைய சம்பளத்தையும் நடிகை ஜோதிகா உயர்த்தியுள்ளார்.

Samayam Tamil 17 Nov 2018, 3:10 pm
நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பின் ‘16 வயதினிலே’ படத்தில் ஆரம்பித்து தற்போது ‘காற்றின் மொழி’ படம் வரை நடித்துள்ளார். கிட்டத்தட்ட குறுகிய இடைவெளியில் ஐந்து படங்களில் நடித்து விட்டார்.
Samayam Tamil திடீரென சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா!
திடீரென சம்பளத்தை உயர்த்திய ஜோதிகா!


ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து ஜோதிகா நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘காற்றின் மொழி’ படமும் சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக ஜோதிகா ரூ. 1.25 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. அடுத்ததாக இவர் அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கான பட பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்தப் படத்தில் நடிக்க ஜோதிகாவுக்கு ரூ.1.5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக இவரது சம்பளமும் உயர்ந்துள்ளது. காற்றின் மொழி திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் ரூ. 30 வசூலித்துள்ளது. ஜோதிகாவுக்கு மவுசு இருக்கும் வரை சம்பளத்தை அதிகரித்து கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்