ஆப்நகரம்

Raatchasi: சைலண்ட் டீச்சராக வரும் ஜோதிகா ராட்சஷியா?

அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் என்பவர் இயக்கத்தில் நடிகை ஜோதிகா தற்போது நடித்து வரும் படத்திற்கு ‘ராட்சஷி என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 15 Mar 2019, 6:48 am
அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் என்பவர் இயக்கத்தில் நடிகை ஜோதிகா தற்போது நடித்து வரும் படத்திற்கு ‘ராட்சஷி என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil jyothika


நடிகை ஜோதிகா திருமணத்துக்கப் பிறகு ‘36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரியானார். இந்தப்படத்தின் வெற்றியை அடுத்து ‘மகளிர் மட்டும், ‘காற்றின்மொழி, ‘நாச்சியார் என தொடர்ந்து கதாநாயகியை மையமாக இருக்கும் படங்களாகப் பார்த்து நடித்து வருகிறார்.

அந்த வரிசையில், அடுத்ததாக நடிகை ஜோதிகா, புதுமுகம் எஸ்.ராஜ் என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில்ஜோதிகாவுடன் பூர்ணிமா, சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதா பாரதி உள்பட பலர் நடிக்கிறார்கள்.இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி ஷெட் போட்டு பெரும்பாலான படப்பிடிப்புகள் அங்கு நடந்தது.

தற்போது படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. நடிகை ஜோதிகா, பகலில் சாதுவான பள்ளி ஆசிரியையாகவும், இரவில் இன்னொரு முகமாவும் இருக்கிற கதை என்கிறார்கள். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

ஜோதிகா நடித்து வரும் இந்தப் படத்திற்கு தற்போது ‘ராட்சஷி என்று பெயர் வைத்திருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்