ஆப்நகரம்

சினிமா வாய்ப்போடு படுக்கைக்கு அழைக்க ஒப்பந்தம் போடுறாங்க: அதிரடி காட்டிய கராத்தே கல்யாணி!

நடிகைகள் மனதளவில் தைரியமாக இருந்தால் நம்மை நெருங்கவே பயப்படுவார்கள் என்று பிரபல நடிகை கராத்தே கல்யாணி கூறியுள்ளார்.

Samayam Tamil 29 Mar 2019, 2:24 pm
நடிகைகள் மனதளவில் தைரியமாக இருந்தால் நம்மை நெருங்கவே பயப்படுவார்கள் என்று பிரபல நடிகை கராத்தே கல்யாணி கூறியுள்ளார்.
Samayam Tamil Karate


சமீபத்தில் மீ டூ என்ற இயக்கத்தின் கீழ் பாலியல் பிரச்சனைகள் கூற இயக்கம் உருவாக்கப்பட்டது. அதில் சில நடிகைகளும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பாலியல் பிரச்சனைகளை பற்றி கூறினார்கள். குறிப்பாக பாடகி சின்மயி, நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என சர்ச்சையை ஏற்படுத்தினார்கள்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘சினிமா வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தனர். பட ஒப்பந்தத்துடன் சேர்த்து படுக்கை ஒப்பந்தத்தையும் தான் பேசுகிறார்கள். தனியாக எனக்கு ரூ.50 ஆயிரம் தருவதாக ஒரு பிரபல நடிகர் ஒருவர் கூறினார். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. நடிகைகள் மனதளவில் மிகவும் தைரியமாக இருந்தால் யாரும் நம்மை நெருங்ககூட மாட்டார்கள்.

அதனால் தான் சினிமாவில் இந்த உயரத்திற்கு வந்துள்ளேன். மேலும் இந்தப் பிரச்சனை சினிமாவில் மட்டுமல்ல. பல துறைகளில் இருக்கிறது. மிக பெரிய கம்பெனிகளில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவை நடக்கிறது’ என்றார். நடிகை கராத்தே கல்யாணி தமிழில் ‘சத்ரபதி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்