ஆப்நகரம்

மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் துடிக்கும் "கருவாப்பையா" கார்த்திகா!

நடிகை கார்த்திகா, பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வெள்ளித்திரையில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Apr 2019, 7:37 pm
‘தூத்துக்குடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘கருவாப்பையா கருவாப்பையா’ பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார் கார்த்திகா.
Samayam Tamil karthika


அதையடுத்து ‘பிறப்பு’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தைரியம்’, ‘மதுரைசம்பவம்’, ‘365’ ‘காதல் கடிதம்’, ‘வைதேகி’, ‘நாளைய பொழுதும் உன்னோடு’ போன்ற படங்களில் நடித்தார் கார்த்திகா. இடையில் தனது தங்கையின் படிப்புக்காக இவர் மும்பையில் செட்டிலானார்.

தற்போது நடிகை கார்த்திகா சென்னை திரும்பியுள்ளார். வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு சென்றபோது, அவரை பார்த்த ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அவரை சூழ்ந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும், ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருப்பது கண்டு மகிழ்ந்த கார்த்திகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தும், வெள்ளிதிரையில்தான் நடிப்பேன் என உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்களும் பேசி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்