ஆப்நகரம்

திருமணத்திற்குப் பின் நடிப்பீர்களா என்று பெண்ணைப் பார்த்து ஏன் கேட்கிறீர்கள், அதையே ஆணிடம் கேட்க வேண்டியதுதானே? நடிகை கஸ்தூரி!

திருமணத்திற்குப் பின் சினிமாவில் நடிப்பீர்களா என்று பெண்ணைப் பார்ர்த்து கேட்ட கேள்வியை தாலி கட்டிய அந்த ஆணிடம் கேட்க வேண்டியதுதானே என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 11 Oct 2017, 4:01 pm
திருமணத்திற்குப் பின் சினிமாவில் நடிப்பீர்களா என்று பெண்ணைப் பார்ர்த்து கேட்ட கேள்வியை தாலி கட்டிய அந்த ஆணிடம் கேட்க வேண்டியதுதானே என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil actress kasturi angry with net memes creaters regarding marriage issue
திருமணத்திற்குப் பின் நடிப்பீர்களா என்று பெண்ணைப் பார்த்து ஏன் கேட்கிறீர்கள், அதையே ஆணிடம் கேட்க வேண்டியதுதானே? நடிகை கஸ்தூரி!


நடிகை கஸ்தூரிக்கு தற்போது பெரிதாக சினிமா வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறி நெட்டிஸன்களிடம் வாங்கி கட்டிக் கொள்கிறார். இப்போதும் அதுபோல ஒன்றை கூறி வாங்கி கட்டிக் கொண்டார்.

நடிகை சமந்தா, நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் ஒரு பத்திரிகையாளர் அவரிடம் “திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு சமந்தா நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார்- Dinathanthi news. அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல? — kasturi shankar (@KasthuriShankar) October 7, 2017
இது குறித்து நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டரில் “திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று சமந்தாவிடம் கேட்பவர்கள், ஏன் அதே கேள்வியை நாக சைதன்யாவிடம் கேட்கவில்லை” என்று கேட்டிருந்தார். அவ்வளவுதான் நெட்டிசன்கள் கஸ்தூரியை போட்டு தாக்கிவிட்டார்கள். “உங்களுடன் நடித்த ரஜினியும், கமலும் இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் ஏன் முடியவில்லை? என்று ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி, “நானும் அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன். தாத்தாக்கள் ஹீரோக்களாக நடிப்பதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், திருமணமான பெண்களை ஹீரோயினாக நடிப்பதை ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?”. என்று கேட்டிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்