ஆப்நகரம்

அம்மா கேரக்டரில் நடித்து வரும் கௌசல்யாவுக்கு விரைவில் கல்யாணம்?!

திருமணமாகாமல் தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கௌசல்யாவுக்கு விரைவில் திருமணமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 16 May 2019, 4:53 pm
தமிழில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. அதையடுத்து ‘நேருக்கு நேர்’, ‘ப்ரியமுடன்’, ‘வானத்தைப் போல’, ‘பூ வேலி’ ‘சந்திப்போமா’ , ‘சொல்லாமலே’ உட்பட தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.
Samayam Tamil kausalya


அப்படி இருந்தும் அவரால் தமிழில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை. நடுவில் சில காலம் கௌசல்யாவைத் தமிழ் திரைப்படங்களில் காண முடியவில்லை. இத்தனைக்கும் கௌசல்யாவுக்கு நடிப்புடன் நல்ல நடனத்திறமையும் இருந்தது.

பின்னர் விஷாலின் ‘பூஜை’ படம் மூலமாக குணச்சித்திர வேடங்களில் திரும்ப வந்தார். இதற்கிடையில் அவருடன் சம காலத்தில் நடிக்க வந்த அத்தனை நடிகைகளும் திருமணமாகி குடும்ப செட்டிலாகி விட கௌசல்யா மட்டுமே இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவராக இருந்தார். மேலும் தற்போதுள்ள படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் கௌசல்யா.

தற்போது கௌசல்யாவுக்கு 38 வயதாகிறது. இத்தனை காலம் தனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாதிருந்ததால் அதைப் பற்றி யோசிக்கவில்லை என்றும், தற்போது திருமண வாழ்வைப் பற்றி யோசிக்கத் தொடங்கி இருப்பதால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கௌசல்யா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்