ஆப்நகரம்

கீர்த்தி சுரேசை காண திரண்ட ரசிகர்களால் கடும் போக்குவரத்து நெரிசல்! போலீஸ் தடியடி!!

நடிகை கீர்த்தி சுரேசை காண திரண்ட ரசிகர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Samayam Tamil 28 Oct 2018, 7:04 pm
வேலூரில் நடிகை கீர்த்தி சுரேசை காண திரண்ட ரசிகர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
Samayam Tamil keerti suresh stuck


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடையின் புதிய கிளைக்கு திறப்பு விழாவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். கீர்த்தி சுரேஷ் வந்த தகவலறிந்த அவரது ரசிகர்கள் அவரை காண படையெடுக்கத் தொடங்கினர். இதனால், திருப்பத்தூர் மட்டுமில்லாமல், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் காலை முதலே திரளத் தொடங்கினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கிளை திறப்பு விழாவுக்காக முக்கிய சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டது. இதனால், அவ்வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் மாற்றுப்பாதை வழியாக சென்றனர்.

விழா முடிந்ததும் கீர்த்தி சுரேஷ் காரில் ஏறி புறப்பட்டார். ஆனால், அவரை பார்ப்பதற்காக காரை சூழந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்து கரகோஷம் எழுப்பினர். ரசிகர்களின் பட்டாளங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட கீர்த்தி சுரேஷ், அங்கிருந்து நகர முடியாமல் திணறினார். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீசாரின் தடியடியால் ரசிகர்களின் பட்டாளம் நாலாப்பக்கமும் சிதறி ஓடினர். மேலும், சிலருக்கு போலீஸ் அடியால் காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் பரபரப்புக்குப் பின் கூட்டம் கலைந்ததும், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்