பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது நமது அரசியலமைப்பு உரிமையை பாதுகாப்பதாக உறுதியளித்தவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற பாலிவுட் வரலாற்றுத் திரைப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புட் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று படத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து, டிசம்பர் 1ஆம் தேதி பத்மாவதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்திற்கு எதிர்ப்பு வலுத்துவருவதால் படத்தை அறிவித்தபடி ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வயாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின் இருண்ட நாள். பத்மாவதி, படத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் நிலவும் அமைதி அதிர்ச்சியளிக்கிறது. சிலர் நமது ஜனநாயகத்தை கொலை செய்ய அனுமதி அளிக்கக் கூடாது. இப்படம் வெளியாகாமல் இருப்பது நமது சுதந்திரத்தையும், நமது அரசியலப்பு உரிமையை பாதுகாப்பதாக உறுதியளித்தவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்று பதிவிட்டுள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற பாலிவுட் வரலாற்றுத் திரைப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புட் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று படத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து, டிசம்பர் 1ஆம் தேதி பத்மாவதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்திற்கு எதிர்ப்பு வலுத்துவருவதால் படத்தை அறிவித்தபடி ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வயாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின் இருண்ட நாள். பத்மாவதி, படத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் நிலவும் அமைதி அதிர்ச்சியளிக்கிறது. சிலர் நமது ஜனநாயகத்தை கொலை செய்ய அனுமதி அளிக்கக் கூடாது. இப்படம் வெளியாகாமல் இருப்பது நமது சுதந்திரத்தையும், நமது அரசியலப்பு உரிமையை பாதுகாப்பதாக உறுதியளித்தவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்று பதிவிட்டுள்ளார்.