ஆப்நகரம்

ரவி சாஸ்திரியை சந்தித்து தனது 33 வருட கனவை பூர்த்தி செய்த நடிகை குஷ்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்ததன் மூலம் தனது 33 வருட கனவு பூர்த்தியாகியுள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

TNN 19 Sep 2017, 4:01 pm
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்ததன் மூலம் தனது 33 வருட கனவு பூர்த்தியாகியுள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
Samayam Tamil actress kushboo sundar meets india cricket coach ravi shastri
ரவி சாஸ்திரியை சந்தித்து தனது 33 வருட கனவை பூர்த்தி செய்த நடிகை குஷ்பு!


நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு எப்போதும் டுவிட்டரில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் உட்பட அனைத்தையும் தனது டுவிட்டரில் பதிவுட்டு வருகிறார் குஷ்பு. அந்த வகையில் தற்போது அவரது டுவீட் படு வைரலாகி உள்ளது. 33 வருடம் கழித்து தனது கனவு நிறைவேறியுள்ளதாக டுவீட் செய்துள்ளார்..


My dream comes true..finally I meet my #hero #RaviShastri..patience pays off..have waited for 33yrs to meet him.. pic.twitter.com/aZwqYlZI06 — khushbusundar (@khushsundar) September 18, 2017
அதற்கு அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பல கேள்விகள் கேட்டு ரீ டுவீட் செய்தனர். ஆனால், குஷ்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்தது குறித்து பதிவிட்டார். என் கனவு நிறைவேறிவிட்டது. ஒரு வழியாக என் ஹீரோ ரவி சாஸ்திரியை சந்தித்தேன். அவரை சந்திக்க 33 ஆண்டுகள் காத்திருந்தேன் என பதிவிட்டுள்ளார். மேலும் ரவி சாஸ்திரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் குஷபு வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்