ஆப்நகரம்

திரையரங்குகள் மூடல் : சினிமாக்காரர்களை குற்றம் சொல்லும் நடிகை!

தமிழ் சினிமாவிற்கு 58 சதவீதம் வரி விதித்திருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதற்கு சினிமாக்காரர்கள் தான் காரணம் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

TOI Contributor 6 Jul 2017, 9:21 am
தமிழ் சினிமாவிற்கு 58 சதவீதம் வரி விதித்திருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதற்கு சினிமாக்காரர்கள் தான் காரணம் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil actress lakshmi ramakrishnan criticize cinema industry
திரையரங்குகள் மூடல் : சினிமாக்காரர்களை குற்றம் சொல்லும் நடிகை!


சமீபத்தில் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்களுக்கு 58 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 30 சதவீதம் ஏற்கனவே உள்ள கேளிக்கை வரி என மொத்தம் 58 சதவீதத்தை நிர்ணயித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

100 கோடி, 500 கோடி கிளப் என விளம்பரம் செய்துவிட்டு, நட்சத்திரங்களின் சம்பளத்தை உயர்த்திவிட்டு இப்போது அழுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதிகம் பணம் சம்பாதித்து, அதிகம் சம்பளம் கொடுத்துவிட்டு இப்போது விரிவிலக்கு வேண்டும் என்று கேட்கின்றனர். சினிமாவை கலையாக எண்ணி படம் எடுப்பவர்களுக்கு மட்டும் வரிவிலக்கு கொடுங்கள். வியாபார படங்களுக்கு வரிவிலக்கு வேண்டாம் என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்