ஆப்நகரம்

எழுத்தாளராக மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கும் மதுஷாலினி!

நடிகை மதுஷாலினி மூன்று வருட இடைவெளிக்குப்பின் தற்போது எழுத்தாளராக ஒரு படத்தில் நடித்த வருகிறார்.

Samayam Tamil 21 Jul 2018, 1:23 pm
நடிகை மதுஷாலினி மூன்று வருட இடைவெளிக்குப்பின் தற்போது எழுத்தாளராக ஒரு படத்தில் நடித்த வருகிறார்.
Samayam Tamil Madhu shalini


நடிகை மதுஷாலினி, ‘தூங்காவனம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது. தற்போது இவர் ‘பஞ்சராக்ஷரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் பிரபல எழுத்தாளர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கோகுல், சனா, அஸ்வின் ஜெரோம், சந்தோஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பாலாஜி வைரமுத்து இயக்கி வருகிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் பாலாஜி கூறுகையில், ‘‘பஞ்சராக்ஷரம்’ எனும் ஐந்து சக்திகளை ஒன்றாக சேர்த்து மனித கேரக்டர்களாக உருவாக்கி, அவர்கள் சந்திக்கும்போது நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக்கியுள்ளோம். இந்தப் படம் திகில் நிறைந்த ஒரு ஹாரர் படம்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்