ஆப்நகரம்

கொரோனாவை விளையாட்டாக எடுக்காதீர்கள் ; ஜாங்கிரி மதுமிதா வேண்டுகோள்!

கொரோனா பாதிப்பை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் செயல்படுமாறு ஜாங்கிரி மதுமிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 8:46 am
கொரோனா வைரஸால் இந்திய அடுத்த 21 நாள்களுக்கு ஷட்டவுன் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பலரும் பல வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மற்ற எல்லாவற்றையும் விட உயிரும் உடல்நலனுமே முக்கியமானது என்பதால், வீட்டை விட்டு யாரும் அவசியமில்லாமல் வெளியேற வேண்டாம் என அரசும், சமூக நல ஆர்வலர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் புகழ் ஜாங்கிரி மதுமிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil jangiri madhumitha


மதுமிதா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,



பொருளாதார ரீதியாகவும், உயிர் பலி காரணமாகவும் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளன. நோய் பரவலை நாம் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை நன்கு கழுவ வேண்டும். கையால் வாய், மூக்கு உட்பட எந்த உறுப்பையும் தொடவேண்டாம். தும்மல், இருமலின்போது கைக்குட்டையை பயன்படுத்துங்கள். அரசின் உத்தரவை மதியுங்கள். 144 தடையை விளையாட்டாக நினைத்து விடவேண்டாம். தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அத்தியாவசியமான பொருள்களை வாங்க வீட்டிலிருக்கும் ஒரு நபர் வெளியில் செல்லலாம். சிலர் விளையாட்டாக தடையை மீறி வெளியில் வர நினைக்கலாம். நீங்கள் எடுக்கும் இந்த ரிஸ்க் உங்கள் குடும்பத்தினருக்கும், சமுதாயத்தினருக்கும் ஆபத்தாக முடியும் என்பதை உணருங்கள்.

அனைவரும் வீட்டிலேயே இருந்து அன்பான குடும்பம், குழந்தைகளுடன் செலவிடுங்கள் என மதுமிதா தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு கீழ் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மதுமிதாவுக்கு நன்றி கூறியும், அவரையும் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


அருமையான பதிவு, தெளிவாக பேசியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் சகோதரி என பலரும் பதிலளித்துள்ளனர். மேலும் நீங்களும் பாதுகாப்பாக இருங்கள் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.

ஓகே ஓகே படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், பிக்பாஸ் இவரை தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்த்தது. பிக்பாஸ் வீட்டில் தமிழின் மகத்துவம் பற்றியும், தமிழ் பெண்ணின் வீரம் பற்றியும் பல விசயங்களே பேசியதால், பலர் இவரது ரசிகர்களாயினர். இவருக்குதான் டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார்கள். ஆனால் எதிர்பாராவிதமாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்