ஆப்நகரம்

கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்: எஸ்.ஜே. சூர்யா பட நடிகை பரபரப்பு புகார்!

நடிகை மீரா சோப்ரா இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் மீது போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Oct 2021, 6:06 pm
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்ககளில் நடித்து வருபவர் மீரா சோப்ரா. தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார். இந்நிலையில் இவர் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தே வெளியேற்றப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Meera Chopra
Meera Chopra


நிலா என்ற இயற்பெயர் கொண்ட இவர் தெலுங்கு, பாலிவுட் படங்களில் மீரா சோப்ரா என்கிற பெயரில் நடித்து வருகிறார். தற்போது மும்பையில் இருக்கும் அந்தேரி பகுதியில் நிலா புதிதாக வீடு வாங்கியுள்ளார். இந்த வீட்டில் உள் அலங்கார வேலைகள் செய்வதற்காக இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் என்பவரிடம் ரூ.17 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு, முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார்

இதையடுத்து பனாரஸில் நடந்த சினிமா படப்பிடிப்பிற்கு சென்ற நிலா, 15 நாட்களுக்கு பின் புதிய வீட்டை பார்க்க திரும்பி வந்துள்ளார். அப்போது தரம் குறைந்த, மலிவான பொருட்களை வைத்து உள் அலங்கார வேலைகள் செய்திருக்கும் விஷயம் தெரிந்து டிசைனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தோனியை புகழ்ந்து ட்வீட் போட்ட தனுஷ்: கண்டமேனிக்கு கழுவி ஊற்றும் அஜித் ரசிகர்கள்!
இதனால் உள் அலங்கார நிபுணர் ராஜிந்தருக்கும், நிலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிலா கூறும் போது, ‘மலிவான, தரம் குறைந்த பொருள்களில் உள் அலங்காரம் செய்திருப்பதை பற்றி கேட்டபோது, இப்படி கேள்வி கேட்டால் வேலை செய்யமாட்டேன் என மிரட்டினார். என்னை எனது வீட்டிலிருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.

என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார்’ என தெரிவித்துள்ளார். மேலும் மும்பை காவல் நிலையத்தில் இது குறித்து ராஜேந்தர் மீது நிலா புகார் அளித்துள்ளார் . தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த வீட்டில் இருந்தே தன்னை அவமானப்படுத்தி வெளியே துரத்தி விட்டதாக நிலா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்