ஆப்நகரம்

எஸ்.ஜே. சூர்யா ஹீரோயின் அப்பாவிடம் கத்திமுனையில் கொள்ளை

டெல்லியில் நடைபயிற்சிக்கு சென்றபோது கத்திமுனையில் தனது தந்தையிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றது குறித்து உரிய நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு மீரா சோப்ரா நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2020, 3:39 pm
எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையானவர் மீரா சோப்ரா. பிரபல பாலிவுட நடிகை ப்ரியங்கா சோப்ராவின் உறவினர். மீரா சோப்ரா தனது தந்தைக்கு நடந்த கொடுமை குறித்து ட்வீட் செய்தார்.
Samayam Tamil meera chopra


அவர் டெல்லி போலீஸை மென்ஷன் செய்து ட்விட்டரில் கூறியதாவது,

போலீஸ் காலனியில் என் தந்தை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது இரண்டு பேர் ஸ்கூட்டரில் வந்து கத்தியை காட்டி மிரட்டி அவரின் செல்போனை பறித்துச் சென்றனர் என்றார்.
அவரின் ட்வீட்டை பார்த்த போலீசார் மேலும் சில தகவல்கள் மற்றும் தொடர்பு எண்ணை கேட்டதுடன், எந்த போலீஸ் காலனியில் இந்த சம்பவம் நடந்தது என்று கேட்டனர்.

அதற்கு மீராவோ எஃப்.ஐ.ஆர். எண்ணை குறிப்பிட்டு இந்த சம்பவம் மாடல் டவுனில் இருக்கும் பிரின்ஸ் ரோட்டில் நடந்தது என்றார்.

மீரா அளித்த புகாரின்பேரில் போலீசார் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள். இதை பார்த்த மீரா டெல்லி போலீசாருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டார். முதியவர்களை பாதுகாப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு கவுன்ட்டர் கொடுத்த மோகன்: அசைன்மென்ட்டானு கேட்கும் நெட்டிசன்ஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்