ஆப்நகரம்

கணவர் மீது பரபரப்பு புகார்.. பிரபல நடிகை தற்கொலை முயற்சி: அதிர்ச்சியில் திரையுலகம்..!

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மைதிலி தூக்க மாத்திரைகளை அதிகளவில் எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 1 Jun 2022, 5:54 pm
தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகை கட்டா மைதிலி. இவர், பிரீசர் எனப்படும் ரம் வகையை சேர்ந்த மதுபானம் 8 பாட்டில்கள் மற்றும் தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Mythili
Mythili


ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டாவில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்று மாலை மைதிலி, பஞ்சகுட்டா காவல்துறைக்கு போன் செய்து தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு தனது கணவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், இல்லையெனில் தற்கொலை செய்துக் கொள்வேன் என அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் மைதிலி. இதுபற்றிய தகவல் பஞ்ஜகுட்டா காவல் நிலையத்திற்கு கிடைத்ததுள்ளது. இதையடுத்து மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து உடனடியாக போலீசார் அங்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மைதிலி சுயநினைவற்ற நிலையில் கிடந்த மைதிலியை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் போலீசார்.

இதனிடையில் கடந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார் மைதிலி. இந்த வழக்கில் தற்போது முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது.

சினிமாவில் அதுக்கு மட்டுமே முக்கியத்துவம்: ரஜினி பட நடிகை வருத்தம்..!
இதேபோன்று சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள மோத்தி காவல் நிலையத்திலும், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மைதிலி புகார் அளித்துள்ளார். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை மைதிலி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்