ஆப்நகரம்

சீதையாக நடிக்கிறார் நயன்தாரா...ராதாரவி என்ன சொல்வாரோ !!

மிகப்பிரமாண்டமாக தெலுங்கில் தயாராகவுள்ள ராமாயணம் 3டி படத்தில் நடிகை நயன்தாரா, மீண்டும் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்தார் நயன்தாரா.

Samayam Tamil 15 Jul 2019, 1:52 pm
தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. 10 வருடங்களுக்கும் மேலாக முன்னணி ஹீரோயினாக அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் சோலோ ஹிரோயினாக நடிக்கும் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Samayam Tamil nayan-in-droupadi

நயந்தாரா

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க ஆசைப்படுகிறேன் - ராதிகா ஆப்தேயின் அதிரடி பேச்சு !!
தெலுங்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்தார் நயன்தாரா. அந்த நேரத்தில், ஸ்ரீராம ராஜ்யமே தனது கடைசி படம் என அறிவித்தார். பிரபுதேவாவை காதலித்து வந்த அவர், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டி, நடிப்பை துறப்பதாக அறிவித்தார். பிரபு தேவாவுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் பின் இருவரும் பிரிந்தனர். மீண்டும் நடிப்பில் இறங்கிய நயன்தாரா சினிவாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்.

சீதையாக நயந்தாரா

தற்போது தெலுங்கில் 3Dயில் மிக பிரம்மாண்டமாக ராமாயணம் திரைப்படம் உருவாக உள்ளது. இந்தியாவில் இதுவரை ராமாயணம் பல வடிவங்களில் வந்திருந்தாலும் 3Dயில் உருவாவது இதுவே முதல் முறை. இப்படத்தில் மீண்டும் சீதையாக நடிக்க நயந்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். இந்தியில் தங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர். மூன்று பாகங்களாக இப்படம் உருவாக உள்ளது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த ராமாயணம் திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தை விட அமலாபாலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விநியோகஸ்தர்கள் !!

நயந்தாராநயந்தாரா

" /> இந்த பிரம்மாண்டமான படத்தில் இந்திய முழுமைக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட பிரம்மாண்டமான ராமாயணம் படத்தில்தான் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குமென தெரிகிறது. முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயந்தரா பிகினி

சூர்யா பற்ற வைத்த நெருப்பு !
மிகச்சமீபத்தில் ராதாரவி நடிகை நயன்தாரா பற்றி பேசியது சர்ச்சைகளை கிளப்பியது. ''பேயாகவும் நடிக்கிறார். சீதையாகவும் நடிக்கிறார்'' என்று நயன்தராவை ராதாரவி விமர்சித்து இருந்தார். தற்போது நயன்தாரா சீதையாக நடிப்பது உறுதியாகி உள்ள நிலையில் ராதாரவி என்ன சொல்வாரோ?

அடுத்த செய்தி

Get Tamil Cinema News, Kollywood News, Tamil Movie News, Celebrity Gossips in Tamil, Cinema News, Tamil Movie Reviews, Tamil Movie Trailer, Teasers. Stay updated with Samayam tamil to read the Latest Tamil News
டிரெண்டிங்