ஆப்நகரம்

Nayanthara: பிரச்சனை மேல் பிரச்சனை: மீண்டும் தள்ளிப்போன நயன்தாராவின் கொலையுதிர் காலம்!

இந்த வாரம் வெளியாக இருந்த நயன்தாராவின் கொலையுதிர் காலம் படம் மீண்டும் ஒரு முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jul 2019, 9:37 am
இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். இப்படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பிரதாப் போத்தன், பூமிகா சாவ்லா, ரோஹினி ஹட்டாங்கடி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். முதலில் கடந்த ஜூன் 14ம் தேதி இப்படம் வெளியாக இருந்தது. இதற்கான முன்பதிவும் தொடங்கியது. இந்த நிலையில், படத்திற்கு தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil nayan


இதற்கு முன்னதாக இப்படத்தை யுவன் சங்கர் ராஜா வெளியேறினார். அடுத்து இசையமைப்பாளராகவும் இருந்த நிலையில், இப்படத்தில் இருந்து தானாக வெளியேறினார். மேலும், தயாரிப்பாளர் – நயன்தாரா இடையில் சம்பள பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து 4ஆவதாக, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசினார்.

Bigil: விஸ்வாசத்தை மிஞ்சும் பிகில்: பிரமாண்டமாக உருவாக்கப்படும் கிளைமேக்ஸ் காட்சி!

ஆனால், உண்மையில், படம் வெளியாகாததற்கு நீதிமன்றம் ஒரு காரணமில்லை என்றும், உண்மையில், பட வியாபாரம் பிரச்சனை காரணமாகவே படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வியாபார பிரச்சனை தீரவே, படம் வரும் 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
Oliyum Oliyum: கோமாளியின் ஒளியும் ஒலியும் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!
ஆனால், அன்றைய தேதியில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள அக்கியூஸ்ட் நம்பர் 1, விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான சென்னை பழனி மார்ஸ், விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், சமுத்திரக்கனியின் கொளஞ்சி, நுங்கம்ப்பாக்கம், ஆறடி ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. அதனால், தியேட்டர் கிடைப்பதில், கொஞ்சம் பிரச்சனை ஏற்படும் என்பதால், அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சீஃப் பப்ளிசிட்டிக்காக பண்றாங்க: இந்து சங்கங்களை தாக்கிய சந்தானம்!
ஆம், ஆகஸ்ட் 1ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்போது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ஜாக்பாட் படம் வெளியாகிறது. இப்படமும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் ஆதலால், இரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. ஆனால், அறிவித்தபடி, படம் வெளியாகுமா? என்பது இன்னும் சந்தேகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்