ஆப்நகரம்

இனி என் வாழ்க்கையில் அதை மட்டும் பண்ணவே மாட்டேன்: கடுப்பான நடிகை நஸ்ரியா.!

வெளிநாட்டு விமானத்தில் பயணம் செய்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நஸ்ரியா.

Samayam Tamil 18 Aug 2022, 6:11 pm
'நேரம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. நிவின் பாலிக்கு ஜோடியாக இந்தப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தனுஷ், ஆர்யா உள்ளிட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்தார் நஸ்ரியா.
Samayam Tamil நஸ்ரியா நசீம்
நஸ்ரியா நசீம்


தமிழில் தனுஷ் ஜோடியாக நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நஸ்ரியா. மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும், ஒரு சின்ன பிரேக்கிற்கு பிறகு தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கில் நானியுடன் இணைந்து நடித்த அடடே சுந்தராகினி படம் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை நஸ்ரியா தாய்லாந்து பயணத்தின் போது தாய் ஏர்வேஸ் விமானத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தாய் ஏர்வேஸின் சேவை மிக மோசமாக இருந்தது.

Thiruchitrambalam: எல்லை மீறிய தனுஷ் ரசிகர்கள்: 'திருச்சிற்றம்பலம்' படத்தால் வெடித்த பிரச்சனை.!

விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவி கேட்டு பணியாளர்களை அழைக்கும் போது அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இனிமேல் என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் பயணம் செய்யமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்