ஆப்நகரம்

பட வாய்ப்புகள் குறைந்ததால் நிகிஷா படேல் எடுத்த அதிர்ச்சி முடிவு

தென்னிந்திய சினிமாவில் படுகவர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ள நிகிஷா படேல் தற்போது வாய்ப்புகள் குறைந்ததால் தென்னிந்திய சினிமாவை விட்டே வெளியேறுவதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 6 Mar 2020, 10:53 am
தெலுங்கில் புலி படத்தின் மூலமாக 2010ல் நடிகையாக அறிமுகம் ஆனவர் நிகிஷா படேல். அதன் பிறகு அவர் 2014ல் தான் தமிழ் சினிமாவில் தலைவன் என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக நுழைந்தார்.
Samayam Tamil Nikesha Patel


அதன் பிறகு ஒரு சில படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டி நடித்துவந்தார் அவர். தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 25 படங்கள் நடித்து முடித்துவிட்ட அவருக்கு தற்சமயம் எந்த பெரிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அதனால் ஒரு அதிர்ச்சி முடிவை அவர் எடுத்துள்ளார். தான் தென்னிந்திய சினிமாவை விட்டு விலகப்போவதாக கூறியுள்ளார் அவர்.

கடந்த ஒரு வருடமாகவே இந்திய படங்கள் ஒப்புக்கொள்வதை படிப்படியாக நிறுத்திய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளார். இவர் பிறந்த வளர்ந்தது லண்டனில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

"நான் 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன், எனக்கே bore அடித்துவிட்டது. நான் கஷ்டப்பட்டு நடித்த படங்கள் அதிக விமர்சனங்களையும் சந்திக்கிறது. அதனால் புதிதாக எதாவது செய்ய முடிவெடுத்தேன்" என கூறியுள்ளார்.

மேலும் இந்தியில் முன்னணி நட்சத்திரங்கள் உடன் இணைத்து பணியாற்ற விரும்பினேன், ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தி சினிமாவில் தென்னிந்திய பட நடிகர்களை மதிக்கிறார்கள், ஆனால் அங்கு கெரியரை துவங்குவது என்றால் மீண்டும் முதலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்கிற சிக்கல் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தி படங்களில் நடிப்பதற்காக லண்டனில் இருந்து இந்தியா வந்து செல்வேன் என்றும், இனி லண்டனில் பிரிட்டிஷ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் கவனம் செலுத்த போவதாகவும் கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள Gilbert & Payne நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளேன். விரைவில் ஹாலிவுட்டில் நுழைவேன் என்றும் கூறியுள்ளார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்