ஆப்நகரம்

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு: போலீசார் அதிரடி நடவடிக்கை!

தனது வீட்டில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் வீட்டில் உள்ள கேமரா மற்றும் ஆடைகளை திருடி சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

Samayam Tamil 19 Jan 2022, 7:47 am
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் நிக்கி கல்ராணி. இவர் தனது வீட்டில் பணியாற்றிய இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதன் பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Nikki Galrani
Nikki Galrani


ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான 'டார்லிங்' படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதனை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது வீட்டில் வேலை செய்து வந்த தனுஷ்(19) என்ற இளைஞர், தனது வீட்டிலிருந்து விலை உயர்ந்த கேமரா மற்றும் நிக்கி கல்ராணியின் ஆடைகளைத் திருடிச் சென்றதாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விருத்தாசலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிக்கி கல்ராணி வீட்டில் பணியில் சேர்ந்துள்ளார்.

சொந்த ஊரில் சாதிக்கலவரம்: இயக்குனர் சேரன் பரபரப்பு ட்வீட்!
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டிலிருந்து கேமரா மற்றும் அவரது ஆடைகளை இளைஞர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து நிக்கி கல்ராணி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில் திருப்பூரில் தனது நண்பர் வீட்டில் இருப்பது தனுஷ் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து கேமரா மற்றும் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் மீது அளித்த புகாரை நிக்கி கல்ராணி வாபஸ் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிக்கி கல்ராணி தற்போது மிர்ச்சி சிவா ஜோடியாக 'இடியட்' என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்