ஆப்நகரம்

எனக்கு கெட்ட பேரு வரும் படத்தில் நடிக்க மாட்டேன்: நிக்கி கல்ராணி!

நான் நடிக்கும் படங்களில் எனக்கு கெட்டப் பேர் கிடைக்கும் விதமான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.

TNN 28 Sep 2017, 11:18 am
நான் நடிக்கும் படங்களில் எனக்கு கெட்டப் பேர் கிடைக்கும் விதமான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actress nikki galrani says about harahara mahadevaki movie
எனக்கு கெட்ட பேரு வரும் படத்தில் நடிக்க மாட்டேன்: நிக்கி கல்ராணி!


இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள அடல்ட் காமெடி படம் ஹர ஹர மஹாதேவகி. நாளை வெளியாகும் இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், இது வயது வந்தோர் மட்டுமே பார்க்க வேண்டிய படம் என்றும், இப்படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி இருவரும் தங்கள் காதலை பிரேக் அப் செய்கிறார்கள். அப்போது என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.



ஹர ஹர மஹாதேவகி என்ற விடுதியில் நடக்கும் கதை என்பதால், அதையே டைட்டிலாக வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். இப்படம் தொடர்பாக நிக்கி கல்ராணி கூறுகையில், என்னைத் தவறாக காட்டும் படங்களில் நான் நடிக்க மாட்டேன். இதில், அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே போன்று கவுதம் கார்த்திக் கூறுகையில், நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன பேசுவார்களோ அது போல்தான் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும்.

ஆனால், இப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இல்லை. ஏனென்றால், நண்பர்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள முடியாது. அதனால், தான் இப்படம் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் படம் என்கிறார். இந்தப் படத்தின் கதையை என்னுடைய அப்பா கார்த்திக்கும் கேட்டார். அதன் பிறகு அவர் விழுந்து விழுந்து சிரித்தார் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்