ஆப்நகரம்

திருமணம் முடிந்த கையோடு நிக்கி கல்ராணி எடுத்துள்ள முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிகை நிக்கி கல்ராணி திருமணத்திற்கு பின்னர் எடுத்துள்ள முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 May 2022, 8:16 am
பிரபல நடிகரான ஆதி தமிழில், மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கும், இவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
Samayam Tamil Aadhi - Nikki Galrani
Aadhi - Nikki Galrani


ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதனைத் தொடர்ந்து, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இதில், நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததை தொடர்ந்து, அண்மையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் ஜீவா, சசிகுமார், நாசர், அருண்விஜய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், தாணு, இயக்குனர் ஹரி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சூர்யா செய்த காரியத்தால் நெகிழும் ரசிகர்கள்: அந்த மனசுதான் சார் கடவுள்

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள ‘வெல்லும் திறமை’ என்கிற ரியாலிட்டி ஷோவில் நிக்கி கல்ராணி நடுவராக கலந்துகொள்ள உள்ளாராம். இதன்மூலம் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்