ஆப்நகரம்

என் திறமைகளை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன் நடிகை பார்வதி!

பிரபல நடிகை பார்வதி, என்னுள் மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்தத்தான் நான் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 22 May 2019, 2:35 am
பிரபல நடிகை பார்வதி, என்னுள் மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்தத்தான் நான் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil Actress Parvathy


தமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிற்பவர் நடிகை பார்வதி.நடிகை பார்வதி நடிப்புடன், பல படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். விரைவில் பார்வதி படம் இயக்க உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘விரைவில் நான் படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது. ஏற்கனவே பல நடிகைகள் படம் இயக்கி வெற்றிபெற்று இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக இது எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.

எனக்குள் பல வருடங்களாக மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்த இந்த படம் உதவும். என்ன கதை என்பது பற்றி இப்போது சொல்ல மாட்டேன். நான் படம் இயக்க வருவது, ஒரு இயக்குனராக என்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. திரையில் இதுவரை சொல்லப்படாத கோணத்தில், மிகவும் நேர்மையாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுதான் இயக்குனராக இருக்கிறேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்