ஆப்நகரம்

கணவனை இழந்த நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு!

பிரபல நடிகை பவானி, கணவனை இழந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

Samayam Tamil 18 Feb 2019, 4:43 pm
தெலுங்கு சினிமாவில் நடிகையாக இருந்தவர் பவானி. தற்போது இவர் தமிழில் சின்னத்திரையில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னதம்பி’ சீரியலில் நடித்து வருகிறாதர் பவானி சங்கர்.
Samayam Tamil pavani


இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை 8 மாதமே நீடித்தது. கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.இதனால் மனமுடைந்து போன நடிகை பவானி, சினிமாவில் நடிக்காமல் நீண்ட நாட்களுக்கு பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பெற்றோர் வற்புறுத்தியலால் அவர் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், எனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை. எனது பெற்றோரின் சந்தோஷ்த்திற்காகவே திருமணம் செய்ய முடிவெடுத்தேன் என கூறினார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்