ஆப்நகரம்

கையில் குட்டி நாகப்பாம்புடன் வீடியோ வெளியிட்ட கோமாளி பட நடிகை

வீட்டின் அருகில் பிடிக்கப்பட்ட பாம்பை கையில் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை பிரவீனா.

Samayam Tamil 30 Apr 2020, 6:57 pm
சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளவர் பிரவீனா. அவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் சின்னத்திரையில் அவர் நடித்து வருகிறார். மகராசி என்கிற சீரியலில் ஒரு ரோலில் அவர் நடித்து வருகிறார்.
Samayam Tamil Praveena


கொரோனா லாக்டவுன் நேரத்தில் பிரவீனா தனது வீட்டில் தான் இருக்கிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் ஒரு நாகபாம்பு குட்டியை அவர் கண்டெடுத்துள்ளார். அதை கையில் வைத்து வீடியோ எடுத்து youtubeல் வெளியிட்டுள்ளார் அவர்.

அந்த பாம்பை பாம்பை பார்த்ததும் உடனே ஒரு பாம்பு பார்க்கிற்கு போன் செய்து அவர்களை வரவைத்து பாம்பை பிடித்துள்ளார். குட்டி பாம்பு என்றாலும் அது படம் எடுத்தபடி இருந்துள்ளது. அதனை கையில் பிடிக்க பிரவீனா பயந்தாலும், அவர்கள் தைரியம் சொன்ன பிறகு அதிக கையில் வாங்கினார்.

பிரவீனா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. வழக்கமாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த நடிகை இவ்வளவு தைரியமாக கையில் பாம்பை வைத்திருந்தது பற்றி பலரும் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த பாம்பை கொல்லாமல் பாம்பு பார்க்கிற்கு அனுப்பி வைத்ததையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்