ஆப்நகரம்

பெண் கல்விக்காக நிதி திரட்ட மாரத்தான் ஓடும் பிரியாமணி!

பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்க இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு நடிகை பிரியாமணி ஓட இருக்கிறார்.

Samayam Tamil 23 Mar 2019, 6:29 pm
பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்க இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு நடிகை பிரியாமணி ஓட இருக்கிறார்.
Samayam Tamil mani


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தனது காதலர் முஷ்தபா ராஜ்-ஜை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார். இதையடுத்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், சுகாதாரம், மாதவிலக்கு ஆகியவற்றால், மாணவிகள் படிப்பைப் பாதியில் விடும் சூழல் இன்றும் நிலவி வருவதால், பள்ளியில் இருங்கள் என்ற பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த நிலையில், பெண் கல்விக்காக நிதி திரட்டும் வகையில், பெங்களூருவில் நடக்கும் மாராத்தான் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். வரும் மே மாதம் 19ம் தேதியில் நடக்கும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு பெண் கல்விக்காக நிதி திரட்ட இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலான பள்ளிகளில் சரியான டாய்லெட் வசதி இல்லாதது, மாதவிலக்கு சுகாதார சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மாணவிகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவது வழக்கமாகி வருகிறது. ஒரு பெண்ணாக இந்த விஷயத்தில் பணியாற்றுவது என் கடமை. அதனால், இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு என்னால் ஆன சிறிய நிதியுதவி திரட்ட முன்வந்துள்ளேன். இது போன்று பலரும் தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்